தற்பொழுது நீண்ட மௌனம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது காரணம் அறிவேன் அறிந்தும் அறியாததுபோல் காட்சியளிப்பு காரணமின்றி புதிய திறப்பிடம் பேச இயலவில்லை; குரல் கேட்கின்றது. எதிர்பார்க்கின்றேன்; வந்துகொண்டிருக்கும் அதன் அழைப்புகள் உதட்டை விரிக்க செய்யும் நிராகரிப்பு சொல்லிடும் மனம்… Read more “பின் மௌனம்…”
ஏய் பு…! ஏய் கூ…!
மாலை மணி 2.30. இன்று வழக்கம் போல் வகுப்பு புளோக்A முதல் மாடியில் நடந்தது. வகுப்பு பக்கத்தில் ஆசிரியர் அறையும் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலகமும் அமைந்துள்ளன. ஓர் ஆசிரியர் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி(POL)… Read more “ஏய் பு…! ஏய் கூ…!”
பேயொன்று
எனக்குப் பரிச்சயமான… நான் விரும்பிய… நான் வளர்த்த… பேயொன்று என்னை… எட்டி உதைத்து முட்டித் தள்ளி கத்திக் கொண்டு நான்கு கறுத்த இறக்கையோடு மிக சாதாரணமாய் பறந்தோடியது http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=185
தகுதியற்றது…
இரைச்சல்களின்றி பெரும் வாழ்வு தன்னை கடக்க தகுதியற்றது… -வீ.அ.மணிமொழி-
பறவையானேன் …
பறவையானேன் … கூண்டுடைத்து பிடித்த மரத்தில் வசிக்கின்றேன் -வீ.அ.மணிமொழி-
வேறு மொழி இல்லை…
எல்லாம் முடிவாகியப் பின் தலையை அசைப்பதைவிட வேறு மொழி என்னிடம் இல்லை…
வரைந்த இரவு
பயத்தைக் கொடுக்கின்ற கனவுகளை மீண்டும் ஒரு முறை என்னைக் காணச் சொல்வது அதிபயத்தைக் கொடுக்கின்றது. அது அபத்தம். அதற்கு மாற்றாக நான் விழித்துக் கொண்டே நாளை மாண்டுவிடலாம் எனத் தோன்றியது. வியர்த்துக் கொட்டியது. இருட்டில் கண்களை விழித்துப்… Read more “வரைந்த இரவு”
யதார்த்தம் சிறையில்
பட்டாம்பூச்சியின் நிறத்தை கூரிய தூரிகையினால் மாற்றிட நினைக்கையில் அதன் நிறம் அதுவே யதார்த்தம் சிறையில்… -வீ.அ.மணிமொழி
எதாவதொரு நாளில்
எதாவதொரு நாளில் நட்சத்திரங்களை வீட்டிற்கு அழைத்து விளையாட ஆசை என்றேன் அது இரவில் மட்டுமே சாத்தியம் என்றாள் ஆயா. எந்த இரவென கேட்டேன் காத்திரு… இரவு நாளை வாசல் திறக்குமென இன்று இரவு சொன்னதாய்… Read more “எதாவதொரு நாளில்”
காய்ந்த நினைவுகள்
அசைவுகளற்ற மரங்களையும் நிலங்களையும் முந்திச் செல்லும் இரயில் சொன்ன கதைகள் அத்தனையும் உண்மைகள் மறைந்த வாழ்வின் திரும்பா காய்ந்த நினைவுகள்… -வீ.அ.மணிமொழி-